தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட தால்வுபாடு, கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், தால்வுபாடுக்கப்பால் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்தனர். அவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகும் ஒரு தனியிலை மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பொருள்களும் மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம் கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட வாகரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்கள், கதிரவெளி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 8 மீனவர்களை கைதுசெய்தனர். இதன்போது ஒரு சுருக்கு வலையும் இரண்டு கண்ணாடியிலை படகுகளும் ஒரு சுழியோடி முகமூடியும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரும் பொருள்களும் வாகரை பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.