காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி

காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (ஆகஸ்ட் 28) உதவியளித்தது. “கெவின் புத்தா’ எனும் ஆழ்கடல் மீன்பிடி படகில் சென்ற இந்நபர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

கிடைக்கப்பட்ட அவசர தகவலுக்கமைய, கடற்படை கப்பல் விஜய வின் கரையோர ரோந்து படகு பி 142 காயமடைந்த மீனவரை கரை சேர்க்க அனுப்பப்பட்டது. கல்லாருக்கு 11 கடல் மைல்களுக்கப்பால் கடலில் வைத்து காயமடைந்த மீனவர் பாதுகாப்பாக கடற்படை படகிட்கு மாற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பின் கற்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அவசரமாக கொண்டுவரப்பட்டார்.