ஜேர்மன் பிரதிப்பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜேர்மன் உயர் ஸ்தானிகராலய பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கோணல் கார்ச்டேன் ஹோல்சேர் அவர்கள் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(31) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படைத்தளபதி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.