2 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர மற்றும் ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்றம் செய்வதில் ஈடுபட்ட 2 நபர்களை சாவகச்சேரி பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள். கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவலுக்கமைய கடற்படையினரால் கலால் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துலைப்புடன் இச் சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களும் கஞ்சாவும் யாழ்பாணம் கலால் திணைக்களத்தாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.