கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்பு
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குபட்ட புத்தளம், கடற்படை கப்பல் தம்பபன்னி யின் வீரர்களுக்கு கிடைக்கபெற்ற தகவலை கொண்டு பின்கட்டிய எனும் பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் நேற்று (செப்டம்பர் 4) கைப்பற்றப்பட்டன.

சிலாபம் பொலிசாருடன் இணைந்து நடத்தப்பட்ட இச் சோதனையின் போது 1,600 லீட்டர் கோடா, ஐம்பது லீட்டர் கலன்கள் 22, சாராயம் தேக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட 20 பரல்கள் மற்றும் 10 காஸ் சிலிண்டர்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிலாபம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.