சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்திளைகேணி கடற்படை காவலரணின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 6) கைது செய்யப்பட்டார்கள்.

இம் மீனவர்கள் வெத்திளைகேணி மற்றும் சுண்டிக்குளம் தடுக்கப்பட்ட கடல் பிரதேசத்தில் இரவு நேரத்தில் சுளியோடி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் 2 கண்ணாடியிலை படகுகள், 4 சோடி சுழியோடும் காலணிகள், 2 ஜிபிஎஸ் கருவிகள் உட்பட 438 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்பாணம் கடற்றொழில் அதிகாரியிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.