சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திகுட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களால் நிலாவெளி பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 9) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு படகு, 3 சுழியோடி முகமூடிகள், 2 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் ஒரு ஜிபிஎஸ் கருவியும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்படவர்களும் பொருட்களும் குச்சவெளி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.