‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியில் கடற்படைக்கு இரண்டாம் இடம்
 

பாதுகாப்பு படையினரின் பாடல் திறமைகளை வெளிக்காட்டு முகமாக பாதுகாப்பு அமைச்சினால் நடாத்தப்படும் ‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியின் இறுதி நிகழ்ச்சி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று மாலை (செப்டம்பர் 11) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு போட்டியாளர்கள் இறுதிக் கட்ட போட்டியில் வெற்றியை நாடி தங்களின் பாடல் திறமைகளால் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். தனது பாடல் திறமையால் பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் அமில சிறிவர்த்தன, போட்டியின் இரண்டாம் இடத்தை சுவீகரிதுக்கொண்டார்.

பரிசளிப்பின் போது இரண்டாம் இடத்துக்கான அவரது பரிசை பாராளுமன்ற சீர்திருத்த மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌ. கயந்த கருணாதிலக அவர்களிடமிருந்த பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வின் போது அமைச்சர்கள், கௌரவ அதிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள் உட்பட பல உயரதிகாரிகளும் வீரர்களும் கலந்துக்கொண்டனர்.