‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

செவனகல பந்தய திடலில் செப்டம்பர் 11 ம் திகதி நடைபெற்ற ‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ மோட்டார் சைக்கில் போட்டியில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய மோட்டார் சைக்கில் வீரர்கள் பல வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் மின்னியல் மற்றும் இயந்திரவியல் படைப்பிரிவு, இலங்கை மோட்டார் சைக்கில் கழகத்துடன் இனைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் கடற்படையின் பதின்மூன்று போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

கடற்படையின் கயான் சண்தருவன் 250 சிசி பிரிவில் முதலாம் இடத்தையும் 250 ரேசிங் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். ஷானக சண்தருவன் திறந்த 250 சிசி பிரிவில் முதலாம் இடத்தையும் 250 சிசி பிரிவின் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். இதேவேளை எம்என் பெரேரா மற்றும் ஜிஆர்கே விஜேசேகர ஆகியோர், 125 சிசி படைகள் மற்றும் 125 திறந்த போட்டிகளில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.