இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி பாதுகாப்பு செயலாளரினால் வெலிசரையில் திறந்து வைப்பு

வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படையின் திருமணமான இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களினால் இன்று (செப்டம்பர் 14) திறந்து வைக்கப்பட்டது. வெலிசறை, கடற்படை கப்பல் கேமுனுவில் அமைக்கப்பட்டுள்ள இவ்விடுதித் தொகுதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பின் பேரில், மேட்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. தளபாடங்கள், வீட்டுப் பாவனைப் போருட்கள் உட்பட சகல நவீன வசதிகளையும் கொண்ட 32 தனி அலகுகளை உள்ளடக்கியதாக இத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குடும்ப விடுதித் தொகுதியின் நிர்மானப் பணிகள் கடற்படையின் சிவில் பொறியியல் பிரிவினால் மேட்கொள்ளப்பட்டது. திறப்பு விழாவிற்கு கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னைய, பிரதி கடற்படை பிரதானியும் தொண்டர் கடற்படையின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ, கடற்படை பணிப்பபாளர் நாயகங்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வீடுகளை பெரும் வீரர்களும் அவர்களின் குடும்பத்தினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.