கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு
 

சீன வுஹான் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகளை பின்பற்றி நாடுதிரும்பிய கடற்படை அதிகாரிகள் குழுவொன்றினால் கடற்படைக்கு 10 சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. நேற்று (செப்டம்பர் 15) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம் அடையாளபூர்வமாக இச்சக்கர நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டன. இவை யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமுற்றிருக்கும் கடற்படை வீரர்களின் மற்றும் கடற்படை வைத்தியசாலைகளின் உபயோகத்திட்காகவும் பகிர்ந்தளிக்கப்படும். லெப்டினன்ட் கமாண்டர் டப்பிஎச்இ விக்ரமசின்ஹ உட்பட 13 கடற்படை அதிகாரிகளினால் இவ்வன்பளிப்பு செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.