கடற்படை தளபதி அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி மற்றும் பசிபிக் கடற்படைப் பிரிவு தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி அட்மிரல் ஜான் எம் ரிச்சட்சன் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் ஆகியோரை சந்தித்தார்.

கடற்படை தளபதியின் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு; தற்போதைய மற்றும் எதிர்கால பயிற்சி, நிபுணத்துவம் மற்றும் அனுபவ பகிர்வு, கடல் பாதுகாப்பு சவால்கள், மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றன. ‘வலுவான கடல்சார் பங்குதாரர்கள்' எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இவ்வருட கருத்தரங்கு உலக நாடுகளின் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையே உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடு நடைபெறுகிறது. இம்மாநாடு சர்வதேச கடற்பலம் சம்பந்தமான கருத்தரங்குகளின் முக்கியமான மாநாடாக கருதப்படுகிறதுடன் சர்வதேச கடற்படை தளபதிகளிடையே கருத்துப்பரிமாற்றம் மற்றும் சர்வதேச கூட்டு விரிவாக்கம் தொடர்பாக ஆராய களமாகவும் உள்ளது. இம்மாநாட்டிட்கு கலந்துக் கொள்ளும் பிரதிநிதிகளால் பிராந்திய மற்றும் உலகளாவிய கடல்வழிப் பிரச்சினைகள் சம்பந்தமான பல பயனுள்ள கருத்துக்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

80 க்கும் அதிகமான கடற்படை மற்றும் 15 கரையோர பாதுகாப்பு படைகளின் தளபதிகள், திறந்த மற்றும் சுதந்திர கடல் வழிகள் பாதுகாப்பு பற்றி கலந்துரையாட இவ்வருட கருத்தரங்கில் கலந்துக் கொண்டுள்ளனர். கடற்படை பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் தர்மேன்திர வேத்தேவ மற்றும் கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் உதவியாளர், கெப்டன் புத்திக லியனகம ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி அட்மிரல் ஜான் எம் ரிச்சட்சன் உடனான சந்திப்பின் போது

 

 

 

 

 

 

 

 

 

 

அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் உடனான சந்திப்பின் போது