4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
 

இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது. அம்மீனவர்கள் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை இந்திய கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ‘ராஜதரங்’ ற்கு கையளிக்கப்பட்டனர். இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் படகு சிஜி 49 (CG 49) இச்செயல்பாட்டில் பங்குகொண்டது.