தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் தம்மண்ணா வின் வீரர்கள், தலைமன்னார் 6 ஆம் மற்றும் 7 ஆம் மணல் மேடுகளுக்கிடைப்பட்ட கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்களை நேற்று (அக்டோபர் 01) கைது செய்தனர். அவர்களுடன் 2 படகுகளும் 10 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.