சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சாலை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிடித்த 1500 கிலோ மீனைசரக்கு வண்டி ஒன்றில் கொண்டு செல்ல முயன்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டடுள்ளனர். மேலும் கடற்படையினரால் ஒரு படகும் சரக்கு வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேக நபர்களும் பொருள்களும் முல்லைதீவு கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.