சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர். அதன்படி கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோதாபய வின் வீரர்கள் கொக்கிளாய் பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன் 3 படகுகளும் ஒரு தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் முல்லைத்தீவு பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம் கன்னக்குடா பிரதேச கடலில் தடுக்கப்பட்ட வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு மீனவர், வாகரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரும் மீன்பிடி வலையும் மட்டக்களப்பு கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.