வடக்கு கடலில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்ய கரையோர பாதுகாப்பு படைக்கு கடற்படையினர் இன்று (அக்டோபர் 03) உதவினர். கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.