2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற ரகசிய தகலொன்றிட்கமைய கிரிந்தை, கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 2 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். பலஹருவை பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 04) மேற்கொள்ளப்பட்ட ஒன்றினைந்த தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் கஞ்சாவும் கொஸ்லந்தை பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். .