ரொடெளவெள ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் பாவனைக்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கடற்படையினால் நிர்மாணிப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மகியங்கனை, ரொடெளவெள ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் மற்றும் பொதுமக்கள் பாவனைக்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இப்பிரதேசத்தில் வசிக்கும் 300 குடும்பங்கள் மற்றும் உபுல்தெனிய வித்தியாலத்தில் கல்வி பயிலும் 356 மாணவர்களுக்கும் 300 க்கும் அதிகமான பிரதேச குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற முடிந்துள்ளது.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால்   நாள்பட்ட சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் முதலுதவியுடன் இதுவரை நாடு முழுவதிலும் சுமார் 33  நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. சுத்தமான குடிநீரின்மை காரணமாக சிறுநீரக கோளாறுகளை எதிர் கொள்ளும் விவசாய சமூகத்தினருக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் இச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்துடன் விவசாய மக்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்றும் கடற்படையினால் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.