மூன்று ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண மற்றும் பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘கஷிமா’, ‘செடோயுகி’ மற்றும் அசாகிரி’ ஆகியவை இன்று மாலை (அக்டோபர் 07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த ஜப்பானிய கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினால் பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டது. இம்மாதம் 12 ம் திகதிவரை இலங்கையில் இக்கப்பல் தங்கியிருப்பதோடு அதன் பணிக்குழுவினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிளும் பங்கேற்க உள்ளனர்.