பங்கலாதேச கடலோர காவல்படையில் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

மேலும் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் முகமது சலிஹுடீன் மற்றும் கப்டன் முகமது ஹாசன் தாரிக் ஆகியோர் கடற்படை தளபதியை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திக்க உள்ளனர். இம்மாதம் 27 ம் திகதிவரை இலங்கையில் இக்கப்பல் தங்கியிருக்கும்.