தனியிழை வலைகளுடன் 5 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் நேற்று முன் தினம் பலுகஹதுரை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு ரோந்து படகும், இரன்டு தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் புத்தளம் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு கடற்படை கட்டளை பானம, இலங்கை கடற்படை கப்பல் மஹானாகவின் வீரர்கள் உட்பட அக்கரைபத்து மற்றும் சம்மாந்தூரை உதவி கடற்றொழில் பனிப்பாளர் அதிகாரிகளும் நேற்று(24) அக்கரைபத்து மற்றும் சம்மாந்தூரை பிரதேசத்தில் தனியிழை வலைகள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 02 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் சம்மாந்தூரை உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.