கூட்டு செயலணி தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

கூட்டு செயலணி”CTF 150” தளபதி கொமடோர் அப்துல் நசீர் பிலால் இன்று(25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கையில் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசனை கர்னல் முகமது எர்ஷாத்தும் கான் ரஜில் அவரும் இச்சந்திப்பின் போது கலந்துக் கொண்டார்.