கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்கள் வழங்கப்படும்.
 

கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன தலமயில் இன்று (09) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் திசாநாயக்க கேட்போர் கூடத்தில் சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தாய் நாட்டில் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்க தன்னுடைய உயிர் தியாகம் செய்த ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு 02 நிமிடங்கள் அமைதியின் பின் இன்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இன்நிகழ்ச்சில் 01 ரனவிக்ரம பதக்கம்” மற்றும் 71 ரனஷுர பதக்கங்கள் வழங்கப்பட்டது.

“ரனவிக்ரம பதக்கம்” தனியாகவோ, மற்றவர்களுடன் கூட்டாக எதிரி முன் காட்டப்படும் துணிச்சலான செயலுக்கு இப் பதக்கம் வழங்கப்படும். “ரனஷுர பதக்கம்” எதிரி முன்னிலையில் எடுக்கபடும் சிறந்த நடவடிக்கைகலுக்கு வழங்கப்படும்.

இந் நிகழ்வுக்கு கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ அவர்கள், கடற்படை துணைத் பிரதானி மற்றும் தன்னார்வதலைமையகத்தில் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசாயிரோ அவர்கள், பிரதேச தளபதிகள், பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், கடற்படையினர், பதக்கத்தை வென்றவர்களுடய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.