கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக கும்புக்வெவ மற்றும் கொஹொம்பகஸ்வெவ பிரதேச மக்களின் நன்மை கருதி இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்று (15) திறந்து வைக்கப்பட்டது.

இவ்வியந்திரத்தின் மூலம் கும்புக்வெவ பிரதேசத்தில் 450 குடும்பங்கள் மற்றும் கொஹொம்பகஸ்வெவ பிரதேசத்தில் 470 க்கு அதிகமான குடும்பங்களும் பயனடையும். வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களில் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணி மற்றும் சிரச ஊடக வலையமைப்பில் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளன. சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 52 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.மேலும் இப் பகுதிகளில் சிறுநீரக நோய் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.