விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இன்று (23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். வருகை தந்த விமானப்படை தளபதிக்கு கடற்படை மரியாதை அணிவகுப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.

விமானப்படை தளபதியாக பதவியேற்றபின் கடற்படை தளபதியுடன் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாக குறிக்கப்பட்டன. இச்சந்திப்பின் போது கடற்படை தளபதி விமானப்படை தளபதிக்கு இதயப்பூர்வமான பாராட்டு தெரிவித்த பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கடற்படை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் கடற்படை தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகளும் இச்சந்திப்பின் கலந்து கொண்டனர்.