சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (28) உடப்பு மற்றும் சின்னபாடு கடல் பிரதேசத்தில் மற்றும் உச்சமுனெய் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 05 படகு, 03 தனியிழை வலைகள், 14 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 07 சுழியோடி முகமூடி மற்றும் 03 சோடி சுழியோடி காலணிகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் புத்தளம் கடற்றொழில் உதவி பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதே தினம் இப் கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் சிலாவதுர கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 படகு, 01 தனியிழை வலை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.