59 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மகியங்கனை பகுதியில் தெஹிகொல்ல மஹா வித்தியாலயம்,அராவத்த மஹா வித்தியாலயம் மற்றும் சிலாவதுர,கொன்டச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு படை தளத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறக்கப்பட்டது. இந்த 03 இயந்திரங்களுடன் இன்று வரை 59 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாடு முலுவ கடற்படை மூலம் நிறுவபட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் தெஹிகொல்ல மஹா வித்தியாலயத்தில் 1500 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் 800 குடும்பங்கள் மற்றும் அராவத்த மஹா வித்தியாலயத்தில் 141 மாணவர்கள், 12 ஆசிரியர்கள் 626 குடும்பங்களும் பயனடையும். தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவருடய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன.