சீனிகம ஸ்ரீ ஜினரதன தொழிற் பயிற்சி நிலையம் அதிமேதகு ஜனாதிபதி கையால் திறக்கப்படும்

கொழும்பு ஹுனுபிடிய கங்காராமயில் வணக்கத்துக்குரிய கலாநிதி கலபொட நானிச்வர உரிமையாளரின் சிறந்த கருத்தாக்கத்தின் உள்நாட்டு மற்றும் வெலிநாட்டு நிதி உதவியுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் கடற்படை உழைப்பின் புனரமைப்பித்த கட்டிடங்கள் மற்றும் இலங்கை கடற்படை தொழில்நுட்ப அறிவின் புனரமைப்பித்த ஸ்ரீ ஜினரதன தொழிற் பயிற்சி நிலையம் இன்று (14) அதிமேதகு திரு மைத்திரிபால சிறிசேன அவர்கலாள் திறந்து வைக்க பட்டது.

முப்படை உறுப்பினர்களுடய பள்ளிப்படிப்பை முடித்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஆரம்பித்த இந்த மையம் கணினி அறிவியல், தொழில்நுட்ப பயிற்சி, நூலகம் உள்ளிட்ட நவீன பள்ளிகூடதுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் குடியிருப்பு பயிற்சிகளுக்காக முழுமையான விடுதிகளும் கட்டப்பட்டது. ஹுனுபிடிய ஜினரதன தொழில்நுட்ப கல்லூரி இணைந்த தொழிற் பயிற்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள “NVQ” வழங்கப்படும் நிலையமாக பதிவு செய்ய இருக்கும் இன் நிருவனத்தில் பின்வரும் பாடநெறிகளை கற்க முடியும். பயிச்சி கற்கும் மாணவர்களுக்கு கடற்படை ஓய்வு பெற்ற தொழில்முறை ஆலோசகர்களுடய அறிவை வழங்கப்படும்.

கணினி தொழில்நுட்பம், குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் தொழில்மயமான பொறியியல், சூரிய ஆற்றல் உபகரணங்கள் பழுது, மொபைல் போன்கள், மின் தொழில்நுட்ப, வெல்டிங் பழுது மற்றும் வெல்டிங் பொறியியல், எஞ்சின்கள் மற்றும் மோட்டார் படகுகள் சீரமைப்பிற்காக பொறியியல் தொழில்நுட்ப இழை கார் மெக்கானிக்ஸ்.

இன் நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட ஜப்பனீஸ் பிரதிநிதிகள் குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பாராளுமன்ற அமைச்சர்கள், தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜய லால் டி சில்வா அவர்கள், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், தெற்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உட்பட விருந்தினர்கள் கலந்துகொன்டன.