ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படை பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகளாக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள்  இன்றுடன் (16) தமது 30 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரை  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன  அவரை  இன்று சந்தித்த வேளையில் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது. சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும்  சிரஷ்ட  அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1986  ம் ஆண்டில் நேரடி நுழைவு அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அவரது அடிப்பட கடற்படை பயிற்சியை நிறைவுக் கூறி கடற்படையின் பல்வேறு கப்பல்களிலும் வேறு ஸ்தாபனங்களிலும் சேவையாற்றியுள்ளார். அவருடைய சேவை காலத்தின் போது கடற்படையின் நலனுக்காக தமது அனுபவத்தையும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகள் மூலம் பெற்ற அறிவையும் அர்பணித்து சேவையாற்றினார். நாட்டிட்கும் குறிப்பாக கடற்படைக்கும் அவர ஆற்றிய சேவை கடற்படை சரித்திரத்தில் பதிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.