சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்திற்கு இணைக்கப்பட்ட வீரர்களால் நேற்று (19) இலத்தடி,தலவில,உச்சமுனி மற்றும் இப்பன்தீவு கடல் பகுதிகளில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் 09 படகுகள், 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ,04 சுழியோடி முகமூடிகள் 04 சோடி சுழியோடி காலணிகள் 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள் மற்றும் 08 தனியிழை வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் புத்தளம் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.