கடற்படைத் தளபதி, ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடலில் கலந்து கொன்டார்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பரிசீலனைக்காக நடைபெற்ற ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடல் இன்று (20) கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர், திரு ருவன் விஜேவர்தன அவருடைய அழைப்பின் ஜப்பான் பிரதிநிதிகளும் கலந்து கொன்ட இப் உரையாடலில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கலந்து கொன்டார்.

இப் உரையாடலில் ஜப்பான் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் குழு இடையே இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இது இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் தொடர்பு சம்பந்தமான விஷயங்கள் ஆலோசிக்க ஏற்பாடு செய்துள்ள மிக முக்கியமான தொடர் பேச்சுவார்த்தையாக கூறளாம்.

இந்த உரையாடலுக்காக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள், பாதுகாப்புப் படைப் பணியாளர்களின் அதிகாரி ஏர் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், இலங்கையில் ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் அட்சுகிரோ மொரொரெ அவர்கள் இரு நாடு பாதுகாப்பு அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.