இன்னும் 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் முடிந்தது. அதன் படி கலேவெல சில்வத்கமயில் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹரவுபொதான தேகெதிபொதான கிராமத்தில் மற்றும் கடற்படை விவசாயம் மற்றும் விலங்குப் பண்ணையின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (27) மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி சிறுநீரக நோய் திரையிடல் செயலணியின் நிதியுதவிவுடன் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு அதன் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தி இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுமார் 1300 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப் பிரதேசங்களில் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்ற கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு இது வரை 78 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டு 35,800 குடும்பங்களுக்கு மற்றும் 27.000 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது. எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். இன் சமூக சேவை நாட்டின் பிற முகவர் மற்றும் துறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகிவிட்டது. இந்த சமூக திட்டம் மூலம் கொடிய சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற ஒரு பெரிய உதவியாக இருக்கிரது.