சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் நேற்று (29) இரண்டு இடங்களின் கைது செய்யப்பட்டனர். வடக்கு கடற்படை கட்டளை மந்டதீவு கடற்படை கப்பல் வேலுசுமனவின் வீரர்களால் மந்டதீவு சீனோர் பையர் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் ஒரு வல்லம், ஒரு படகு, மற்றும் 02 தனியிலை வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மந்டதீவு கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் தல்வுபாடு பிரதேச கடலின் தனியிழை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு படகு, 02 சுழியோடி முகமூடிகள் 02 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் 03 தனியிலை வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.