10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

கிடைத்த உளவுத்துறை தகவல் படி கடற்படையினர் காவல் துறை உதவியின்  10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் படி மேல் கடற்படை கட்டளை வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனுவின் வீரர்கல் மற்றும் பேலியகொட பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மோட்டார் வன்டி மூலம் செல்வதற்கு தயாராக இருந்த 09 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யபட்டவர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை எதிர்கால சட்ட நடவடிக்கைலுக்கு கந்தான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.

மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எலுவகுலம் பகுதியில் 01 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யபட்டவர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை எதிர்கால சட்ட நடவடிக்கைலுக்கு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.