சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இரண்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று (7) வடமத்திய கடற்படை கட்டளை தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் இணைக்கப்பட்டுள்ள வீர்ர்களால் தலைமன்னார் வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அங்கு, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட விசைப்படகும் கைது செய்யப்பட்டது. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதே தினம் வடக்கு கடற்படை கட்டளை காரய்நகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் இணைக்கப்பட்டுள்ள வீர்ர்களால் நெடுந்தீவின் வட பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அங்கு, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு விசைப்படகு மற்றும் 02 மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டது. சந்தேக நபர்களும் பொருள்களும் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் யாழ்ப்பாணம் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.