சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (7) சின்னபாடு கடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்களைக் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 டிங்கி படகு, 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ,02 சுழியோடி முகமூடிகள் 02 சோடி சுழியோடி காலணிகள், பிடிக்கப்பட்ட 07 கிலோ கிரேம் கடல் அட்டைகள் மற்றும் 55 சங்குகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் புத்தளம் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதே தினம் வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் சிலாவதுர கடல் பிரதேசத்தில் காப்புறுதி கொள்கை மற்றும் பதிவு புத்தகம் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் 03 டிங்கி படகு, 03 மீன்பிடி வலைகள் மற்றும் 3 ஜிபிஎஸ் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.