சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று(12) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உச்சமுனி மற்றும் பலுகஹதுரை பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்தார்கள். அங்கு 04 டிங்கி படகுகள், 18 தனியிழை வலைகள், 01 ஜிபிஎஸ் இயந்திரம் மற்றும் பிடிக்கப்பட்ட 269 கிலோ கிரேம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் புத்தளம் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.