சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (19) சிலாவதுர கடல் பிரதேசத்தில் மீன்பிடி உரிமம் இல்லாமல் மற்றும் தனியிழை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு, இரு தனியிலை வலை ,04 சுழியோடி முகமூடிகள் 03 சோடி சுழியோடி காலணிகள், ஒரு ஜிபிஎஸ் இயந்திரம் ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.