மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதின் இன்னோறு திட்டமாக சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு அப் பகுதிகளின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படும் அதன் படி தலாவ,கடியாவ யாய 1 கிராமத்தில்,பொல்பிதிகம கல்ஹிடியாகம கிராமத்தில் மற்றும் பூனாவ இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் நிருவப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (20) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது.

அதன் படி கடியாவ யாய 1 கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் அப் பகுதியில் சுமார் 325 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.மேலும் கல்ஹிடியாகம கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் அப் பகுதியில் சுமார் 720 குடும்பங்களுக்கு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் 1076 கடற்படை உறுபினர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். தலாவ மற்றும் பொல்பிதிகம பகுதிகளின் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரங்களுக்கு ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுப்பு செயலணி நிதியுதவி வழங்கியது.

இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் செய்யப்படும். இது வரை 105 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 47,855 குடும்பங்களுக்கு மற்றும் 40,600 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும்.