சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (24) பேசாலை பிரதேச கடலில் தனியிலை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.