கடற்படையினர் இருவரை 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 4.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம், 02 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் மேற்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தின் வீர்ர்கள் மற்றும் பேலியகொட காவல்துறையின் உதவியுடன் ஹுனுபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யபட்ட குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பேலியகொட பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பமுனுகம இலங்கை கடற்படை கப்பல் கலனி திணைக்களத்தின் வீரர்கள் மற்றும் போதை தடுப்பு அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி மூலம் கொன்டு செல்லப்பட்ட 2.1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.