சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நாசிகுடா கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று (25) முன்தம்பிட்டி பிரதேச கடலில் தனியிலை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு,ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.