02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும்.மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு அப் பகுதிகளின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது அதின் இன்னோறு திட்டமாகும். அதன் படி ராஜாங்கனய யாய 15 மற்றும் யாய 16 கிராமங்களின் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (26) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது.

அதன் படி ராஜாங்கனய யாய 15 கிராமத்தில் 600 குடும்பங்கள் மற்றும் யாய 16 கிராமத்தில் 475 குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுப்பு செயலணி நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு நிதியுதவி வழங்கியது. கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி இதை தயாரிக்கப்பட்டது. இது வரை 115 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 51,530 குடும்பங்களுக்கு மற்றும் 43,850 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும்.