02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.மேலும், மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.அதன் மற்றுமொரு திட்டமாக. பதவிய புத்தங்கல மத்திய கல்லூரியின் மற்றும் பதவியபிசோகொடுவ கிராமங்ளில் நிர்மாணிக்கப்பட்ட 02 நீர்சுத்திகரிப் இயந்திரங்கள் இன்று (28) மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கபபட்டன.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் பாடசாலையில் கல்வி1200மாணவர்கள், 50ஆசிரியர்கள் மற்றும் குறித்த இக்கிராமத்தில் வசிக்கின்ற 750 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். குறித்த இச் செயற்றிட்டத்திற்குஐக்கிய இராச்சிய " அன்பே உறுப்பினர்" அமைப்பு மற்றும்கடற்படை சமூக நல நிதியம்ஆகியவற்றின் மூலம் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் பதவிய மற்றும்பிசோகொடுவ ஆகிய கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலயங்கள் மூலம் அப் குதியில் வசிக்கின்ற 560 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.குறித்த இச் செயற்றிட்டத்திற்குசிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்றிட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இது வரை 117நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்நிருவப்பட்டுள்ளன.52,810 குடும்பங்களுக்கு மற்றும் 45,100ற்குமேற்பட்டமாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும்இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.