02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள்பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமையஇலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்து.மேலும், மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.அதன் மற்றுமொரு திட்டமாக. அனுராதபுரம்,ஹோரவுபதான சுவர்னதிலகராம விஹாரையின் மற்றும் ரதிமல்கஹவெவ ஹந்தகலரஜ மஹா விஹாரையின் நிர்மாணிக்கப்பட்ட 02 நீர்சுத்திகரிப் இயந்திரங்கள் இன்று (30) மக்கள் பாவனைக்குதிறந்துவைக்கபபட்டன.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் சுவர்னதிலகராம விஹாரையின் நிர்மாணிக்கப்பட்டநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 360 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். ஹந்தகலரஜ மஹா விஹாரையின் நிர்மாணிக்கப்பட்டநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 480குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.குறித்த இச் செயற்றிட்டத்திற்குபுத்த சாசன அமைச்சு நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்றிட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவுமற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இது வரை 119 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறுபகுதிகளில்நிருவப்பட்டுள்ளன 53,650குடும்பங்களுக்கு மற்றும் 45,100ற்குமேற்பட்டமாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.எதிர்காலத்திலும்இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால்மேற்கொள்ளபடவுள்ளன.