இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

எரிபொருள் மற்றும் பொருட்கள் தேவைக்காக இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் இன்று (02) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதின் கட்டளை அதிகாரி கமாண்டர் ரியோ ஹென்றி முயுகொ யம் அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்களை சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த கப்பல் இம் மாதம் 05ஆம் திகதி இலங்கை விட்டு புறப்படும்.