புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைகான இந்திய உயர் ஸ்தாணிகர் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவோ அவர்கள் கடற்படைத்தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(7) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். புதிதாக பாதுகாப்பு ஆலோசகராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொணடதன் பின்னர் கடற்படைத் தளபதியுடன் சந்திக்கும் இச் சந்திப்பானது இந்திய கெப்டன் ரவோ அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து, கடற்படைத்தளபதி அவர்களினால் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது பாரட்டினையும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் குறித்த இச்சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.