சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (9) குரும்புபிட்டி பிரதேச கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02  உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு ரோந்துப் படகு மற்றும் தடை செய்யப்பட்ட இரு வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி மீனவ பணிப்பாளர் அலுவலகத்தின் ஒப்படைக்கப்பட்டது.