சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீர்ர்களால் அனுமதிப் பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலந்தடிய மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதியில் வைத்து 06 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்து மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் 02 ரோந்துப் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் உதவி மீனவ பணிப்பாளர் அலுவலம் மற்றும் கந்தக்குளி வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றில் ஒப்படைக்கப்பட்டது.